நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழப்பு!

download 3 6
download 3 6

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன்படி, குறைந்த பட்சம் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் உயரதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், நைஜீரியாவின் லாகோஸ் நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் 24 மணிநேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.