கொங்கோவில் சிறைச்சாலை மீது தாக்குதல் : 1000 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெனி என்ற இடத்திலுள்ள சிறைச்சாலையில் நேற்று (20) அதிகாலை ஆயுதமேந்திய 100 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறையிலிருந்த 1,300க்கும் அதிகமான கைதிகளை அக் கும்பல் மீட்டுச் சென்றது.

இவர்களில் 20 கைதிகள் மீண்டும் சிறைக்கே வந்துவிட்ட நிலையில் தப்பியோடிய கும்பலையும், கைதிகளையும் தேடும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.