அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்தியா, ஸ்ரீலங்கா, மாலைதீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு திணைக்களம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி முதலில் இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு மைக்பொம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலர் மாக் எஸ்பர் ஆகியோர் விஜயம் செய்து தமது அமைச்சு மட்டத்திலான பேச்சுக்களை முன்னெடுப்பர்..

இதனையடுத்து ஸ்ரீலங்காவுக்கும் மாலைதீவுக்கும் பின்னர் இந்தோனேசியாவுக்கும் அவர்கள் பயணங்களை மேற்கொள்வர் என அமெரிக்க வெளியுறவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.