கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதிப் பகுதியளவில் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் மரணிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் இதுவரையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 29 ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஆய்வொன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறு இருப்பினும், அனைவரும் முகக்கவசம் அணிவதன்மூலம் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் உயிர்களை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.