அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிகரித்து வரும் ஆயுத விற்பனை!

usa Guns

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆயுத விற்பனை தீவிரம் அடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவைச் சரிசெய்யும் வகையில் அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளுக்கு ஆயுத விற்பனையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆயினும் தேர்தலில் வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் விற்பனை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.