எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட கைச்சாத்திடப்போவதில்லை ; ஜனாதிபதி உறுதி

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட இலங்கை கைச்சாத்திடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதியாகக் கூறியிருக்கின்றார்.

சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன் புதன் கிழமை தான் நடத்திய பேச்சுக்களின் போது இது தொடர்பாக ஆராயப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

“எம்.சி.சி. உடன்படிக்கையில் நாம் கைச்சாத்திட்டால் தாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறப்போவதாக சிலர் சொல்கின்றார்கள். கனவில் கூட அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை. சிலர் தமது ஆதரவாளர்களை உணர்வூட்ட இவ்வாறான உரைகளை நிகழ்த்துகின்றார்கள்” எனவும் தெரிவித்தார்.