உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டி எட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்(Tedros Adhanom Ghebreyesus) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன், தனக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், தான் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். .
மேலும், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களின் அடிப்படையில் தான் வீட்டில் இருந்து தனது பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அனைவரும் சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் என, உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.