போலாந்தில் கொரோனா தொற்றுக்கான தற்காலிக மருத்துவ மையமாக மாற்றப்பட்ட தேசிய மைதானம்!

போலாந்திலுள்ள தேசிய மைதானமானது கொரோனாத் தொற்றுக்கான தற்காலிக மருத்துவ மையமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் குறித்த மைதானத்தில் கொரோனாத் தொற்றுக்குச் சிகிச்சையளிக்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக அங்கு சுமார் 1,200 படுக்கை வசதிகளும், வென்டிலேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் நாட்டிலுள்ள பிற நகரங்களிலும் கொரோனா மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அந் நாட்டின் பிரதமர் மேட்டூஸ் மொராவெய்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.