கொரோனா தொற்று அச்சம் : டென்மார்க்கின் சில பகுதிகள் முடக்கம்!

114094669 b900de91 c915 486a bf87 7ea65a71e5cc
114094669 b900de91 c915 486a bf87 7ea65a71e5cc

கொரோனா வைரஸ் தொற்று அச்ச நிலை காரணமாக டென்மார்க்கின் சில பகுதிகளில் முடக்கப்படவுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி எதிர்காலத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாமென டென்மார்க் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், டென்மார்க்கின் Jutland நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானசாலைகள், உணவகங்கள், பொது போக்குவரத்து மற்றும் அனைத்துவிதமான உள்ளக விளையாட்டு நிலையங்களும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.