பிரேஸிலில் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட நபர்!

பிரேஸிலில் மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இளைஞரொருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

பஹியாவைச் சேர்ந்த டியோகோ ரபேலோ என்பவருக்கும் விட்டர் புவெனோ என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் டியோகோ மற்றும் ரபேலோ ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இத் திருமணத்தை ரபேலோ ரத்து செய்ய முடிவெடுத்து அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த டியோகோ மனதை தேற்றிக்கொண்டு பஹியாவிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.