அமெரிக்காவில் கொரோனாவை ஒழிப்பதே எனது பிரதான கடமையாகும் என அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அதிகளவிலான பீ சீ ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், மக்கள் முகக்கவசம் அணிவதை வழமைக்கு கொண்டுவருவதும் தன்னுடைய வேலைதிட்டங்களில் முதல் கட்டமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதற்கு முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பின் ஆட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் குறித்த அமைப்பிலிருந்து விலகப்போவதில்லை என புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.