உணவு பொருட்களை வீணடித்தால் கடும் தண்டனை- வட கொரியா தலைவர்

images 8
images 8

வடகொரியாவில் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 புயல்கள், அந் நாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், மற்றும் கொரோனாத் தாக்கம் போன்ற காரணங்களால் அங்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந் நாட்டு ஜனாதிபதி மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்குச் சமம் என்றும், எந்த நிகழ்வில் எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் பட்டியலிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.