அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் மீண்டும் பதவியேற்பார் என மைக் பொம்பியோதெரிவித்த கருத்தால் வெடித்தது சர்சை!

swearing800
swearing800

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்பார் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளமையானது அமெரிக்கா மட்டுமல்லாது உலக அரங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிட்டார்.

தேர்தலில் வெற்றிபெற 270 வாக்குகளை பெற வேண்டும் என்ற நிலையிருந்த போதும், ஜோ பைடன் ஏற்கனவே 290 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுவிட்டார்.

ஜனவரி 20 ஆம் திகதியன்று பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பார் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “ட்ரம்பின் இரண்டாம் ஆட்சி சுமுகமாக ஏற்படும். தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது.

எல்லா வாக்குகளையும் நாம் முழுமையாக எண்ணப்போகிறோம். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னர் வெற்றியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படும்.

எல்லாவற்றுக்கும் ஒரு விதிமுறை இருக்கிறது. இதை அரசியலமைப்பு சட்டம் தெளிவாக கூறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் ட்ரம்ப் தான் வெற்றிபெற்றுவிட்டதாக கூறி வருகிறார். மேலும், தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.

இந்தநிலையில், மீண்டும் ட்ரம்ப் ஜனாதிபாக பதவியேற்பார் என அமெரிக்காவின் மிக மூத்த அதிகாரிகளில் ஒருவரான மைக்பொம்பியோ தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.