இந்தியாவில் ஆள்துழை கிணற்றில் வீழ்ந்து இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் மற்றுமொரு சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இம்முறை உயிர்ச்சேதமின்றி இடம்பெற்றுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பத்திரமாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எத்தனை உயிர்கள் காவு கொள்ளப்பட்டாலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உண்டாவதும் இல்லை, அரசாங்கம் கண்டு கொள்வதும் இல்லை.