சுவரொட்டிகளுடன் விமல் வீரவன்சவின் அமைப்பாளர் கைது

vimal 1
vimal 1

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான சுவரொட்டிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் சிலாபம் அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே அத்துடன் அவரின் வீட்டிலிருந்து 3850 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான நபரை சிலாபம் ​நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.