கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் – யுனிசெப்

593333 1
593333 1

கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

இந் நிலையில் 2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புருண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும், மருந்தை எடுத்துச் செல்ல 350 விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.