பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவு கொரோனா நோயாளர்கள் அடையாளம்!

germa
germa

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 430 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு மேலும் 603 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே பிரித்தானியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மதுபான சாலைகள் உணவகங்கள் களியாட்ட விடுதிகள் என்பன விடுமுறை நாட்களில் திறக்கப்படமாட்டாது என பிரித்தானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.