பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் வித்யாபாலன். இவர் சமீபத்தில் தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வித்யாபாலன் சில விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் குடும்ப பாங்கான பெண் கேரக்டருக்கு பொருத்தமானவர் என்றால் அது வித்யாபாலன் தான். இந்த நிலையில் வித்யாபாலன் சினிமா உலகில் சந்தித்த அவமானங்களை பற்றியும், குண்டாக இருந்ததன் காரணமாக தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதை பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கும் தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.
அதாவது சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும், நடிகையும் உயரமான ஒரு இடத்தை பிடிப்பதற்கு முன்பு பல இன்னல்களை சந்தித்து வருவது வழக்கம்தான். அதேபோல் தானும் ஒரு பிரச்சனையை சந்தித்ததாக வித்யாபாலன் ஒரு பேட்டியில் உருக்கமாக கூறி இருக்கும் தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் வித்யா பாலன், ‘ஆரம்பத்தில் நான் மோகன்லாலுடன் நடிப்பதற்காக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். ஆனால் அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வெறும் ஏழு நாட்களில் என்னை மாற்றிவிட்டு வேறு ஒரு ஹீரோயினை நடிக்க வைத்தார்கள். இதற்கு காரணம் கேட்டதற்கு நான் குண்டாக இருப்பது தான் என்று கூறினர். மேலும் இதே காரணத்தை தொடர்ந்து கூறி 6 படங்களில் நான் ஹீரோயினாக நடிப்பதற்கு செட்டாக மாட்டேன் என்று கூறி என்னை நீக்கிவிட்டார்கள்’ என்று மிகவும் வருத்தத்துடன் கூறினாராம் வித்யா.
இதனால் மனம் உடைந்த வித்யா வெறும் தண்ணீரை மட்டும் குடித்து, பட்டினி கிடந்து தனது உடல் எடையை பெருமளவு குறைத்தராம். எனவே, வித்யாபாலனை பற்றிய இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.