மலையாளத்தில் வெளியான காதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தமிழில் மெல்லிய நடிகருடன் சமாதான கொடி பிடித்து நடித்தாராம். சமாதானகொடி பிடித்த பின்பு பட வாய்ப்பு வரும் என்று நினைத்தாராம். ஆனால், ஒன்றுமே கிடைக்க வில்லையாம்.
தற்போது தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். மேலும் இனிமேல் தமிழில்தான் நடிக்க போறேன் என்று சபதம் எடுத்து பல இயக்குனர்களுக்கு தூது அனுப்பி இருக்கிறாராம். ஆனால், இயக்குனர்களோ நடிகையை கண்டுகொள்ளவில்லையாம்.
இதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை நான் தமிழில் தான் நடிப்பேன் என உறுதி எடுத்துள்ளாராம்.