பாக்கியலட்சுமி தொடர் நாடகத்தில் கோபி தனது மனைவி பாக்யலக்ஷ்மிக்கு துரோகம் செய்துவிட்டு ராதிகாவுடன் பழகி வருகிறார். ஆனாலும் இதுவரை சிக்காமல் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார் அவர். இப்போ சிக்குவாரா.. அப்போ சிக்குவாரா என பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அவரது கள்ளக்காதல் இன்னும் மனைவிக்கு மட்டும் இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் கோபி ராதிகாவின் வீட்டில் இருக்கும்போது ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ராதிகாவின் அம்மா தனக்கு தெரிந்தவர்கள் முன் கோபிக்கும் ராதிகாவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது என சொல்கிறார்.
இதை கேட்டு மயூ ஒரு பக்கம் அதிர்ச்சி ஆகிறார். கோபியே இதை எதிர்பார்க்கவில்லை தான். அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறார் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்