வேகமெடுக்கும் கட்சிப் பணி- ரஜினி ஆலோசனை

i3 9
i3 9

தமிழகத்தில், 2021ல், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அதற்கான முன்னேற்பாடாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

திரைமறைவில், கூட்டணி குறித்தும், துாதர்கள் வாயிலாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி, டில்லியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம் என, பேட்டி அளித்தார்.

மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கத் தயார் என்றும் ,இதைத் தொடர்ந்து, முஸ்லிம் அமைப்புகள், மத குருமார்களையும் அழைத்து பேசி வருகிறார்.

சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் தேர்தல் குறித்தும், கட்சி அறிவிப்பது பற்றி விவாதித்து உள்ளனர். மன்ற செய்திகளை தலைமை உத்தரவின்றி வெளியே சொல்லக்கூடாது என ரஜினி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.