பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, ‘ஆரோக்கிய சேது’ என்ற மொபைல் செயலி குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘இந்த செயலியை, நம் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்வது அவசியம்.
நமக்கு, சளி, இருமல் இருந்தால், இந்த செயலி மூலமே அரசுக்கு சொல்ல முடியும்.
தவிர, நம் அருகே கொரோனா தொற்று உள்ளவர் யாரேனும் இருந்தாலும் தெரிவித்துவிடும்’ என, கூறியுள்ளார்.