செய்தி சனல்கள் மோசமான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது;ரைசா வில்சன்

i3 2
i3 2

விஜய் டி.வியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது, காதலிக்க யாருமில்லை. எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார்.

செய்தி சனல்கள் மோசமான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. செய்தி சனல்கள் நினைத்தால் உலகையே மாற்ற முடியும் என்ற கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பதால் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்த கொள்ள செய்தி சனல்களை தொடர்ந்து பார்த்து வந்தேன். உலக அளவிலான சனல்களையும் பார்த்தேன். பெரும்பாலான சனல்கள் மோசமான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.

ஏன் நல்ல செய்திகளையும், மோசமான செய்திகளையும் அவர்களால் சமமாக வெளிட முடிவில்லை என்று தெரியவில்லை. செய்தி சனல்கள் செல்வாக்கு மிக்கவை. அவைகள் நினைத்தால் இந்த உலகத்தையே மாற்றி அமைக்க முடியும் என்பதையும் புரிந்த கொண்டேன். என்று எழுதியிருக்கிறார்.