திருமணத்திற்கு முன்பு எத்தனை படங்களில் நடிக்க முடியுமோ நடிப்பேன்;நிஹாரிகா

i3 11 2
i3 11 2

திருமணத்திற்கு முன்பு எத்தனை படங்களில் நடிக்க முடியுமோ நடிப்பேன் என்று அறிவித்துள்ளார் நிஹாரிகாக கூறியுள்ளார் .

அந்த அறிவிப்புக்கு பிறகு அவர் நடிக்கும் படம் தமிழில் உருவாகிறது. அசோக் செல்வன் ஹீரோ. இதனை இப்போது தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அறிமுக பெண் இயக்குநர் சுவாதினி இயக்குகிறார். இப்படத்தை தனது 7வது படமாக தயாரிக்கவுள்ளது கெனன்யா பிலிம்ஸ்.

இதுகுறித்து நிஹாரிகா கூறியதாவது: அடுத்து நான் நடிப்பது தமிழ் படத்தில். அசோக் செல்வனுடன் நடிக்கிறேன். சுவாதினி இயக்குகிறார். அவரது கதையும், கதை சொன்ன விதமும் எனக்கு பிடித்திருந்ததால் எந்த தயக்கமும் இன்றி ஒப்புக் கொண்டேன். 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்கிறார் நிஹாரிகா.