2 கதாநாயகிகளால் சிக்கலில் ராஜமவுலி!

i3 12 2
i3 12 2

பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் என இரண்டு ஹீரோக்களை வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி.. ஆங்கிலேயர் கால பின்னணியில் சுதந்திரப் போராட்ட களத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் இருவரும் சுதந்திர போராட்ட வீரர்களாக நடிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகிகளாகவும் இரண்டு பேர் நடிக்கின்றனர்.

அதில் ஒருவர் பாலிவுட் நடிகை அலியா பட்.. இன்னொரு கதாநாயகியாக லண்டனைச் சேர்ந்த ஒலிவியா மோரிஸ் என்கிற தியேட்டர் ஆர்டிஸ்ட் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஆங்கிலேயே இளவரசியாக நடிப்பதற்காகத்தான் லண்டனைச் சேர்ந்த இவர் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நடித்துள்ள 7 ட்ரையல் 7 டேய்ஸ் என்கிற தொடரில் இவரது நடிப்பை கண்டு வியந்து போய், அதன்பிறகே இவரை இந்த படத்தில் கதாநாயகியாக்கினார் ராஜமவுலி.

தற்போது கொரோனா தாக்கம், அதை தொடர்ந்த ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தேதிகள் அனைத்திலும் மாற்றம் செய்யவேண்டிய சூழல் தானாகவே உருவாகிவிட்டது. இதில் லண்டனை சேர்ந்த ஒலிவியா, கொரோனா பயம் அல்லது வெளிநாட்டு போக்குவரத்து நிறுத்தம் என ஏதோ ஒன்றை காரணமாக சொல்லி இந்த வருடத்தில் தன்னால் இந்தியா வரமுடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

இன்னொரு பக்கம் பாலிவுட்டை சேர்ந்த அலியா பட், அடுத்தடுத்து இந்திப்படங்களில் நடிப்பதற்காக கொடுத்த கால்ஷீட் வேறு தன்னை நெருங்கி கொண்டிருப்பதாக கூறி ராஜமவுலியை டென்சன் ஆக்கி உள்ளாராம். இந்தநிலையில் ஜூலை-15 முதல் படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம் என்கிற ஆந்திர முதல்வரின் அறிவிப்பால் சற்றே ரிலாக்ஸ் ஆகி இருக்கிறாராம் ராஜமவுலி