மாலா பார்வதியின் மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு

i3 12 3
i3 12 3

மலையாள திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் மாலா பார்வதி. தமிழில் ‘இது என்ன மாயம்’ மற்றும் ‘நிமிர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது அவரது ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வரும் சீமா வினீத் என்பவர் மாலா பார்வதியின் மகன் அனந்த கிருஷ்ணன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு தொடர்ந்து ஆபாசமான உரையாடல்களை குறுந்தகவல்களாக அனுப்பி அத்துமீறியதாக அவர் மாலா பார்வதியிடமே குறிப்பிட்டுள்ளார்.

இதனை கேட்ட மாலா பார்வதி, பெண் என்பதால் சீமா வினீத்திற்கு நேர்ந்த சங்கடத்தை உணர்ந்து, தனது மகனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார்.

அதற்கு உண்மையை ஒப்புக்கொண்ட அவரது மகன், ஆனால் இருவரின் பரஸ்பர விருப்பத்தின் பேரில் தான் இது நடந்தது என கூறியுள்ளார்.

உடனே சீமா வினீத்தை அழைத்து, தன் மகன் மீது தவறு இருப்பதாக கருதினால் போலீஸில் தன் மகன் மீது புகார் அளிக்கும்படி கூறினாராம்.

ஆனால் அதை விரும்பாத சீமா வினீத் தரப்பு ஆட்கள் இதை நாமே பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறி ஒரு பெரும் தொகையை கேட்டார்களாம். அதன்பிறகு மாலா பார்வதி செய்த காரியம் தான் அதிரடியானது.

இதுகுறித்து மாலா பார்வதி கூறும்போது, “என் மகன் என்பதால் அவனுக்கு சாதகமாக நான் பேசமாட்டேன்.. சீமா வினீத்தும் பெண் தானே.. அதனால் இந்த பிரச்சனை குறித்து என் மகன் மீது போலீஸில் புகார் அளிக்கும்படி கூறினேன்.. ஆனால் அவர்கள் இதன்மூலம் பிளாக்மெயில் செய்வது போல பணம் கேட்க முயற்சித்தார்கள்.. அதனால் நானே போலீஸில் அவர்கள் பணம் கேட்பது குறித்து புகார் செய்துள்ளேன்.. போலீஸார் இருதரப்பையும் விசாரிக்கட்டும்.. என் மகன் மீது தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும்.. அதற்காக பணம் கொடுத்தெல்லாம் இந்த பிரச்சனையை முடிக்க என் மனம் இடம் தரவில்லை” என்று கூறியுள்ளார்.

மாலா பார்வதியின் இந்த எதிர்பாராத அதிரடியால் சீமா வினீத் தரப்பினர் அதிர்ந்து போயிருக்கிறார்களாம்.