முன்னணி நடிகர்களின் மெய்ப்பாதுகாவலர் தாஸ் காலமானார்

i3 13 3
i3 13 3

விஜய், அஜித், சூர்யா என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் உட்பட பல ஹீரோக்களுக்கு மெய்ப்பாதுகாவலராக பாதுகாப்பு அளித்து வந்த மாரநல்லூர் தாஸ் என்பவர் இன்று காலமானார்.

திரையுலக நட்சத்திரங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போதும் சரி, வெளி விழாக்களில் கலந்துகொள்ள செல்லும்போதும் சரி அவர்களுக்கு பாதுகாப்பு அரணாய் செயல்பட்டு வந்த இந்த தாஸ், பவன் கல்யாண், ஷாருக்கான் என மொழி தாண்டிய பிரபலங்களுக்கும் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர்.

கடந்த 25 வருட காலமாக திரையுலகினரின் நன்மதிப்பை பெற்றிருந்த இவரது மறைவு திரையுலகில் பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகை சேர்ந்த பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.