பாலைவனத்தில் கிரிக்கெட் ஆடிய பிரித்விராஜ்

i3 8 3
i3 8 3

நடிகர் பிரித்விராஜ் தான் நடித்துவரும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த மார்ச் மாதம் ஜோர்டன் நாட்டுக்கு சென்றார்.

இந்தப்படத்தில் அவர் அரபு நாடுகளில் ஒட்டகம் மேய்க்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் ஜோர்டன் நாட்டில் ‘வாடி ரம்’ எனப்படும் பாலைவனத்தை ஒட்டிய நகரத்தில் தங்கி படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கொரோனா தாக்கம் காரணமாக, திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அங்கேயே கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கி இருந்து, கடந்த இருபது நாட்களுக்கு முன்புதான் படக்குழுவினர் ஊர் திரும்பினார்கள்.

அப்படி அங்கே தங்கி இருந்த சமயத்தில் பொழுது போகாத நேரங்களில் ஊருக்குள் சுற்ற முடியாது என்பதால், அருகில் இருந்த பாலைவனத்திற்கு சென்று கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர். பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர். இதுகுறித்த ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பிரித்விராஜ்,, “ரோஹித் சர்மா போன்று ஒரு ஷாட் அடிக்க நினைத்தேன்.. ஆனால் கிளீன் போல்ட் ஆனேன்” என்றும் கூறியுள்ளார்.