24 படத்தில் சூர்யாவுக்கு முன் விக்ரம்

i3 10 3
i3 10 3

விக்ரம் கே.குமார் டைரக்சனில் சூர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் ’24’ என்கிற படம் வெளியானது. டைம் மெஷினை மையப்படுத்தி உருவான இந்தப்படத்தில் சூர்யா முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்ததுடன் அதில் வில்லன் கதாபாத்திரத்திலும் அவரே நடித்திருந்தார்.

தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளிலும் விக்ரம் கே.குமார் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் 24 படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விக்ரம் தான் என்கிற ஒரு புதிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் விக்ரம் கே.குமார்

24 படத்தின் கதை விக்ரமுக்கு பிடித்துப்போய் அவரை வைத்து பட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டதாம்.. கதாநாயகியாக இலியானா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பு என எல்லாம் கூடி வந்த நேரத்தில் சில காரணங்களால் மேற்கொண்டு படம் நகரவில்லையாம். அந்தசமயத்தில் சூர்யா, விக்ரம் கே.குமார் தெலுங்கில் இயக்கிய மனம் படத்தை பார்த்துவிட்டு அவரை அழைத்து பாராட்டியதோடு, அந்தப்படத்தை தங்கள் குடும்பத்தை நடிக்க வைத்து ரீமேக் செய்யலாம் என்றும் தனது விருப்பத்தை கூறினாராம்.

அப்போதுதான் சூர்யாவிடம் 24 படத்தின் கதையையும் கூறினாராம் விக்ரம் கே.குமார். அந்த கதை சூர்யாவுக்கு ரொம்பவே பிடித்துவிட, தந்தை மகன் என இருவேடங்களில் நடிப்பதுடன் வில்லன் பாத்திரத்தையும் தானே நடிப்பதாக கூறினாராம். அதன்பிறகு தான் சூர்யாவுக்கு மூன்று வேடங்கள் என மாறியதாம். அந்தப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாவிட்டாலும் கூட இந்த கதையின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாகத்தான் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கவும் தற்போது சூர்யா நல்ல சமிக்கை கொடுத்துள்ளாராம்.