கொரோனா காலத்தில் பிரபலங்களின் மரணம் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. அப்படி தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ஜெய பிரகாஷ் ரெட்டி இன்று காலை(08) குண்டூரில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
நகைசுவையாளராகவும், சிறந்த நடிகராகவும் விளங்கிய இவரின் மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழில் இவர் உத்தம புத்திரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.