அனிதா சம்பத் இதற்காக தான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்!

பிக்பாஸ் வீட்டில் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் நீண்டநாள் வீட்டில் இருப்பார் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

ஆனால் வீட்டில் நுழைந்த 2வது நாளே அவருக்கும், சுரேஷ் என்பவருக்கும் சண்டை தொடங்கியுள்ளது. இதில் அனிதா பக்கம் நியாயம் இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் அவரது இன்ஸ்டா பக்கத்தை அவரது கணவர் பிரபு பயன்படுத்தி வருகிறார். அனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதற்கு முன்பே ஒரு பதிவை தயார் செய்து வைத்துவிட்டு வர அதை அவரது கணவர் இப்போது பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram

பெத்த புள்ளய விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு..7 வர்ஷமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன்..7 வர்ஷ செய்தி வாசிப்பு..எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல ..நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு புடிச்ச வேலை.. . "உனக்கு அப்பறம் வந்த புது பொண்ணுங்கள்ளாம்,சீரியல் ஷோ அது இதுனு வளந்துட்டாங்க..நீ ஏன் இன்னும் நியூஸயே படிச்சிகிட்டு வளராம இருக்கனு நிறைய பேர் கேப்பாங்க" . திடீர் ட்ரெண்டிங்க்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும்…அதுல நிறையவே சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சும்..நான் எந்த வாய்ப்பையும் ஏத்துக்கல..அடுத்து எடுத்து வக்கிற அடி நல்ல வாய்ப்பா நம்ம மனசுக்கு சரினு பட்டா மட்டும் தான் ஏத்துக்கணும்னு கடந்த 2 வர்ஷமா செய்திகளை விடாம இருந்தேன்.. . கடைசியா இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம்! . நான் பிரம்மிச்சு பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கத்துல நிக்கிர வாய்ப்பு..! . உலகத்து சினிமாக்காரன்லாம் வாய பொலந்து வியந்த ஒரு நடிகன் என் பெயர உச்சரிக்க போகிற ஒரு வாய்ப்பு.. . அவர் பக்கதுல நின்னு பேசி இருக்கேன்னு என் அடுத்த சந்ததிக்கிட்டயும் சொல்லி சொல்லி பெரும பட்டுக்க கூடிய ஒரு வாய்ப்பு.. . வெற்றி பெருவதெல்லாம் வேற விஷயம்..முதல்ல இந்த வாய்ப்பு என்பதே அவ்ளோ எளிதில கிடைக்க கூடிய வாய்ப்பு இல்ல…. . இத கண்டிப்பா experience பண்ணனும்னு தான் இந்த முடிவு!! . எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து..உள்ளே! நான் நானாக!! This official page is temporarily handled by admin @itsme_pg

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on