பிக்பாஸ் வீட்டில் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் நீண்டநாள் வீட்டில் இருப்பார் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.
ஆனால் வீட்டில் நுழைந்த 2வது நாளே அவருக்கும், சுரேஷ் என்பவருக்கும் சண்டை தொடங்கியுள்ளது. இதில் அனிதா பக்கம் நியாயம் இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் அவரது இன்ஸ்டா பக்கத்தை அவரது கணவர் பிரபு பயன்படுத்தி வருகிறார். அனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதற்கு முன்பே ஒரு பதிவை தயார் செய்து வைத்துவிட்டு வர அதை அவரது கணவர் இப்போது பதிவு செய்துள்ளார்.