கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைவோருக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிவித்தல்!

yj 4
yj 4

இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழையும்போது அனைத்து ஊழியர்களும் வெளிச் செல்லும் பயணிகளும் பி.சி.ஆர். சோதனை முடிவினை வைத்திருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (லங்கா) நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய உழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிச் செல்லும் அனைத்து பயணிகளும் 72 மணி ‍நேரத்திற்கு மேல் இல்லாத பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அது தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து செயல்பாட்டு ஊழியர்களிடமும் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் குறித்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் நேற்றைய தினம் இலங்கையில் முதன் முறையாக ஆகக் கூடுதலான பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்றைய தினம் 5,608 பி.சி.ஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.