பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பிரச்சினை கடந்த இரண்டு நாட்களாக சென்றுகொண்டிருக்கிறது.
ப்ரோமோக்களிலும் இவர்கள் பிரச்சினையை மட்டுமே அதிகம் காட்டப்படுவதால், ரசிகர்களும், அதிருப்பதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில், குக்கிங் டீமில் சமைப்பதில் சுரேஷிற்கும் டீமிற்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் உடனே கோபித்துகொண்டு வெளியே வந்த சுரேஷ், மற்ற போட்டியாளர்களிடம் உங்க அணியில் சேர்ந்துகொள்கிறேன் என ஷிவானியிடமும் ரியோவிடமும் கேட்டுள்ளார்.
அதற்கு ஏன் என்ன பிரச்சினை என ரியோ கேட்க, “உப்பு போட்டு சோறு திங்குற எவனும் அந்த அணியில் இருக்க மாட்டான்” என ஆவேசத்துடன் பதிலடி கொடுத்தார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியிலேயே உறைந்துபோனார்கள்.