வீடுகளில் சேகரிக்கப்படும் மின் கழிவுகளை அருகில் உள்ள தபால் நிலையத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுக்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 02 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை நாளையுடன் நிறைவடைய உள்ளதால் வீட்டில் உள்ள மின் கழிவுகளை நாளைய தினத்திற்குள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் கையளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.