சர்க்கரை நோய்க்கு கைகண்ட இயற்கை மருந்து ஆவாரம்பூ கஷாயம்!

inner11538375096
inner11538375096

தேவையான பொருட்கள்:

ஆவாரம் பூ – 200 கிராம்

சுக்கு – 2 துண்டு
ஏலக்காய் – 3
உலர்ந்த வல்லாரை இலை – 200 கிராம்
சோம்பு – 2 டீஸ்பூன்
செய்முறை:

மேற்க்கண்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும்வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

மருத்துவப்பயன்:

சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும் இதய நோய் வாய்ப்புண் சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.