காரைதீவில் எரிந்த நிலையில் மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

karaitivu 1
karaitivu 1

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10ம் குறிச்சி பகுதியில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி திடீரென எரிந்த நிலையில் சடலமாக தரையில் வீழ்ந்து அலறியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வேளை வீட்டில் மாணவியின் சகோதரர் மாத்திரமே இந்த சம்பவத்தை முதலில் அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் பரவியிருந்த தீயினை அயலவர்களின் உதவியுடன் அணைத்ததாக அங்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். சடலமாக மீட்கப்பட்ட மாணவி காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் கா.பொ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.