தற்போது இடம்பெறுகின்ற சம்பள முரண்பாடுகள் மற்றும் அவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாட்டில் பல இடங்களிலும் ஆசியர் சங்கங்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே அவர்களின் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவு உண்டு என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்களால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு நல்க வேண்டியது எமத கடமையாகும். சமூகத்திலே பார்வையாளர்களாக மட்டும் இருப்பதால் எதுவும் கிடைக்கப்போவதில்லை பங்காளிகளாக மாறுங்கள். பார்வையாளர்களாக சமூகத்தில் இருக்கும் வரை நாம் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. பங்காளிகளாக மாறும் போது நாம் எமக்கான தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இன்று ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆக அவர்களின் போராட்டம் என்ன காரணங்களுக்காக முன்னெடுக்கப்படுகிறதோ அந்த இலக்கினை அவர்கள் அடைய வேண்டும். அதுவரை அவர்களிற்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவை அனைவருக்கும் உண்டு. எனவே அவர்கள் போராட்டம் வெற்றிபெறும்வரை எமது ஆதரவுகள் அவர்களுக்கு தொடர்வதோடு எம்குரல் அவர்களுக்காக சேர்ந்து ஒலிக்கும் என்று உள்ளது.