மாயி திரைப்படத்தில் இடம்பெறும் வாம்மா மின்னல் நகைசுவை காட்சியை நாம் மறந்திருக்க மாட்டோம்.
அந்த படம் மூலம் பிரபலமானவர் நடிகை தீபா. சினிமாவில் நடித்த வந்த அவர் பின் சின்னத்திரை பக்கம் களமிறங்கினார்.
இவருக்கு கடந்த ஆகஸ்ட் 24ம் திகதி சுப்பிரமணி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
கொரோனா நேரம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது.
சின்னத்திரை நடிகை தீபாவிற்கு இது இரண்டாவது திருமணம். தீபாவிற்கு கடந்த 2013ம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட விவாகரத்து பெற்றனர்.
தற்போது மறுமணம் செய்திருக்கும் தீபாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.