யாழில் 48 மணித்தியாலத்தில் 8 பேர் போதனாவில் அனுமதி!

2 e l
2 e l

கொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட உரும்பிராய் மற்றும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 48 மணி நேரத்தில் 8 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் உரும்பிராயைச் சேர்ந்த பழ வியாபாரி மற்றும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பலாலி இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார், தாவடி மற்றும் மன்னாரைச் சேர்ந்தவர்களின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.