மகாராஷ்டிரா மாநிலத்தில் தொலைபேசி வீடியோ வழியாக திருமணம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மணமகன் ஒரு இடத்திலும், மணமகள் வேறிடத்திலும் இருந்தாலும், வீடியோ வழியாக ஒருவரையொருவர் பார்த்து திருமண சடங்குகளை முடித்துக் கொண்டனர்.
கொரோனா வைரஸ் அபாயத்தை தடுக்க இந்தியாவில் முழுமையான ஊரடங்கு அமுலில் உள்ளநிலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணமொன்றை தள்ளிவைக்காமல், தொலைபேசி வீடியோ வழியாக நடத்தி முடித்தனர்.
மணமக்கள் கைபேசியில் ஒருவரையொருவர் பார்த்திருக்க, இரண்டு இடங்களிலும் சடங்குகள் நடந்து திருமணத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.