யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை – வைத்தியர் சத்தியமூர்த்தி!

Director of Jaffna Teaching Hospital Dr. Sathiyamoorthy
Director of Jaffna Teaching Hospital Dr. Sathiyamoorthy

யாழ். கொரோனா ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 353 பேரின் முடிவுகள் குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:-

“இன்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 353 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் கொரோனாத் தொற்று எவருக்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார் .