கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய 118 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் 5 பேர் உட்பட ஹெட்டிப்பொலவில் உள்ள அலுவலகத்துக்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமுகமளித்த 75 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும், அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுயதனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன், தயாசிறி ஜயசேகரவின் பிரத்தியேக செயலாளருக்கும் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.