ஆசியாவின் விடுதியுடன் கூடிய முதல் மகளிர் பாடசாலையான பெருமைக்குரிய யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசில்நாள் இன்று இடம்பெற்றது.
தென்னிந்திய திருச்சபையின் ஆயர் பேரருட்திரு டானியல் எஸ். தியாகராஜா தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் திருமதி பற்றீசியா சுனித்தா ஜெபரட்ணம் வரவேற்புரையினையும் பரிசில்நாள் அறிக்கையினையும் வழங்கினார் தொடர்ந்து முதன்மை விருந்தினராக கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
அதன் பின்னர் நிகழ்வின் இறுதியில் ஞாபகார்த்த விருதுகளை கல்வியிலும் விளையாட்டிலும் சாதித்த மாணவர்கள் பெற்றுக் கொண்டனர் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட அவிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் ,யாழ்மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.