வவுனியாமேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் சான்றுப்பொருளான 150 கிலோ கேரள கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஓமந்தை பகுதியில் இன்று காலை அவை அழிக்கப்பட்டது .
முடிவடைந்த வழக்குகளில் சான்றுப்பொருள்களான சுமார் 150 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளினை அழிப்பதற்கு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது, அதற்கமைய அது அழிக்கப்பட்டது.
இதன்போது வவுனியா மேல் நீதிமன்றப்பதிவாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், நீதிமன்ற வளாகப் பொறுப்பதிகாரி , ஓமந்தை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் உடன் இருந்ததனர்.