வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதிய தலைவராக ஏற்கனவே பதவி வகித்திருந்த ஜெக சோதிநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர்சங்க மண்டபத்தில் இன்று (27) இடம்பெற்றது.
இதன்போது புதிய நிர்வகசபைத்தெரிவு இடம்பெற்றது. அந்தவகையில் புதியதலைவராக ஏற்கனவே தலைவராக பதவிவகித்த வீ.ஜெகசோதிநாதன், தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப தலைவராக பா.பாலேந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் இயக்குனர் சபை உறுப்பினர்களாக மா.சிவகுமார், வே.தயாநந்தன். நா,நாகேந்திரன், செ.மயூரன், மு.துரைராசா, ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.