இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் சற்றுமுன்னர் நாட்டை விட்டு வௌியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் (27) இரவு அவர் இலங்கைக்கு வந்தடைந்தார்.
நேற்றைய தினம் அவர் ஜனாதிபதி மற்றும் பிரமருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த அவர், குறித்த சந்திப்பின் ஊடாக இரு நாட்டிற்கும் இடையிலான தொடர்பு மேலும் வலுப்பெற்றதாக தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.