வவுனியா காவல் நிலைய பெண் உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா காவல் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பெண் காவல்துறை உத்தியோகத்தர் விடுமுறையில் சென்றிருந்தார்.
தற்போது மீண்டும் கடமைக்கு திரும்பிய நிலையில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.இதில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வவுனியா காவல் நிலைய உத்தியோகத்தர்கள் சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.