ஹஜ் கடமையை சாதாரண மக்களும் நிறைவேற்றும் வகையில் ஹஜ் கட்டணங்களை ஒழுங்குபடுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஹஜ் குழுத்தலைவர் மர்ஜான் பளீல் தலைமையிலான குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
களுத்துறை ‘லாயா’ ஹோட்டலில் ஹஜ் குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
இதன்போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இச்சந்திப்பில் குழு அங்கத்தவர் அஹ்கம் உவைஸும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.