இந்தியாவின் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என சாய்பாபாவுக்கு வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
3 இலட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் கை சுத்திகரிப்பு திரவ போத்தல்கள், உணவு தானியங்கள், பழங்கள், மேலும் பல உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த பௌர்ணமி தினத்தன்று இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபாவை வேண்டி வழிபட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.