உத்தரகாண்டின் சக்ரதாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்தமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்து பற்றிய செய்தி பரவியதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக அவசரகால பதிலளிப்பவர்கள் சம்பவ இடத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மாநில தலைநகரான டேராடூனில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ள சக்ரதா தெஹ்சில் தியுனியின் தொலைதூரப் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.